தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? எல். முருகன் கேள்வி!

Udhayanidhi Stalin DMK Murugan
By Vidhya Senthil Oct 26, 2024 02:45 AM GMT
Report

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் 2 முறை பாடியபோதும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகவே இருந்துள்ளது.

உதயநிதி 

தமிழக அரசின் புத்தாய்வு திட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அங்கு இருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அதில்‘திகழ்பரதக் கண்டமிதில்’ என்பதற்கு பதிலாக, ‘கண்டமதில்’ என்றும், ‘புகழ்மணக்க’ என்பதற்கு பதிலாக, ‘திகழ்மணக்க’ என்றும் அவர்கள் பிழையாக பாடினர்.

udhayanithi

அப்போது பிழையின்றி பாடுமாறு அவர்களை துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார். அதன் பிறகு மீண்டும் பாடியபோதும், அதேபோல பிழையாகவே பாடினர். இதனால், நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி , ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை.

அமெரிக்காவுக்கு கறுப்பின இயக்கம் போல் தமிழ்நாட்டிற்கு திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின்

அமெரிக்காவுக்கு கறுப்பின இயக்கம் போல் தமிழ்நாட்டிற்கு திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின்

அவர்கள் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால், இரண்டு மூன்று இடங்களில் அவர்களது குரல் கேட்கவில்லை.எனவே, மீண்டும் சரியாக பாட வைத்தோம். நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டது.தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தேவையின்றி மீண்டும் பிரச்சினையை கிளப்பாதீர்கள்’’என்று கூறினார். 

எல்.முருகன்

  இந்த நிகழ்வு குறித்து  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருப்பதாவது: தவறு நடந்தால் சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வதுதான் நல்ல தலைவருக்கு அழகு. ஆனால், டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டும்கூட,

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் சர்ச்சை

அதை வைத்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அரசியல் செய்தனர். இப்போது துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் 2 முறை பாடியபோதும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகவே இருந்துள்ளது. இப்போது, முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார். துணை முதல்வர் உதயநிதி பதவி விலகுவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.