தேர்தல் பிரச்சாரம்...வாகனத்தில் இருந்து தலைகுப்புற விழுந்த தெலுங்கானா முதல்வர் மகன்!!
வரும் நவம்பர் 30-ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானா ஆந்திர மாநிலத்தை பிரித்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய தற்போதைய பாரதிய ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் கே.சி.சந்திரசேகர ராவ் தான் தற்போது வரை முதல்வராக இருந்து வருகின்றார்.
இவருடைய மகன் கே.டி.ராமா ராவ் அம்மாநிலத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தொழில்கள் மற்றும் வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றின் அமைச்சராக உள்ளார்.
தலைகுப்புற விழுந்த கே. டி.ஆர்
வரும் நவம்பர் 30-ஆம் தேதி அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடித்திட பி.ஆர்.எஸ் கட்சி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான், பிரச்சாரத்தின் போது, கே.டி.ராமா ராவ் வாகனத்தில் இருந்து தலைகுப்புற விழுந்துள்ளார்.
KTR accident clip ?#TelanganaElections2023 pic.twitter.com/G5YKzHV07k
— Radoo?️ (@Chandan_radoo) November 9, 2023
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூரில் தேர்தல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரோட் ஷோ சென்றபடி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது டிரைவர் திடீரென பிரேக் போட்டதில் முன்னிருந்த கிரில் உடைந்து கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ், ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் ரெட்டி, எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி ஆகியோர் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இருப்பினும் யாருக்கும் பெரிய அடிகள் ஏற்படவில்லை.