நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைக்கும் கங்கிரஸ் தலைமை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைக்காக கே.எஸ்.அழகிரி டெல்லி செல்லவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலான ஒன்றாக இருக்கின்றது.10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவிட நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது பெரும் பின்னடைவை பாஜக கொடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், வலுவான இந்தியா கூட்டணியை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் பெரும் முயற்சிகளை கையாண்டு வருகின்றது. இந்நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி செல்லும் அழகிரி
தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலவரம், தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்தான இணக்கங்கள் போன்றவற்றை குறித்து பேச காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பேச்சுவார்ததை வரும் டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைப்பெற உள்ளது.
இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி, கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தொகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர்,செல்லக்குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.