அவனும் மனுஷன் தான் - ரசிகர்கள் மறந்துவிட்டாங்க! ஹர்திக் குறித்து நெகிழ்ந்த க்ருணால்
மும்பை மைதானத்தில் ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் கரகோசத்தில் அமர்ந்திருந்தது ஒரு சினிமாவை போலவே இருந்தது.
ஹர்திக் பாண்டியா
மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து கடும் விமர்சனங்களை பெற்றார் ஹர்திக் பாண்டியா. சமூகவலைத்தளத்தை தாண்டி மைதானத்தில் ஹர்திக்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஹீரோவாக மாறியுள்ளார் ஹர்திக். முக்கியமான நேரத்தில் கிளாசனின் விக்கெட்டை எடுத்தது மட்டுமின்றி, கடைசி ஓவரையும் நேர்த்தியாக வீசினர் ஹர்திக்.
பலரும் அவரை தற்போது புகழ்ந்து வரும் சூழலில், தற்போது ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா அவரை குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக கண்ட கனவில் வாழ்ந்து வருகிறோம். எனது சகோதரரும் அணியில் இருக்கிறார் என்பது எமோஷனலாக உள்ளது.
அவனும் மனுஷன் தான்
ஹர்திக் பாண்டியாவின் கடந்த 6 மாத பயணம் கடினமானதாக அமைந்தது. எனக்கும் அது சோகத்தை அளித்தது. கிண்டல்கள் தொடங்கி ரசிகர்கள் ஏராளமான விஷயங்களை பேச தொடங்கினார்கள். ஆனால் ஹர்திக்கும் ஒரு மனிதன் என்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால் அவர் சிறிது கொண்டே அதனை கடந்து வந்துவிட்டார்.
ஹர்திக் உழைப்பை ஒரு போதும் மட்டும் கைவிடவில்லை. உலகக்கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதில் கவனத்தை செலுத்தினார்.
ஒவ்வொரு முறையும், ஹர்திக் பாண்டியாவின் கதை முடிந்தது என ரசிகர்கள் எழுதிய போதெல்லாம், அவர் இன்னும் பலத்துடன் கம்பேக் கொடுத்துள்ளார். என் சகோதரனை நினைத்து பெருமை கொள்கிறேன்.