இலங்கையிடம் தோற்றது மானக்கேடு; அவரு எதுக்கு டீமில் இருக்காரு? ஸ்ரீகாந்த் தாக்கு!

Indian Cricket Team Mohammed Siraj
By Sumathi Aug 09, 2024 02:30 PM GMT
Report

இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய அணி தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இழந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்,

srikanth - siraj

இலங்கை அணியை இந்தியா பொட்டலம் கட்டிவிடும் என்று நான் நினைத்தேன். இலங்கையை நான் பொட்டலம் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவை இலங்கை பொட்டலம் கட்டி விட்டது.

என் முடிவில் தலையிடுகிறார் - கம்பீர் மீது கடும் கோபத்தில் ரோகித் சர்மா!

என் முடிவில் தலையிடுகிறார் - கம்பீர் மீது கடும் கோபத்தில் ரோகித் சர்மா!

ஸ்ரீகாந்த் சாடல்

முக்கிய வீரர்களான பதிரானா, மதுசங்கா, ஹசரங்கா போன்ற வீரர்கள் எல்லாம் இல்லாமல் தான் இலங்கை அணி இந்த தொடரில் விளையாடியது. அவர்களால் ஜெயிக்க முடியவில்லையா? இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்தியா தடுமாறி இருக்கிறது.

siraj

வெல்லாலகே போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணியை அவர்கள் காலி செய்து இருக்கிறார்கள். சிராஜ் எதற்கு அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு முறை ஆசிய கோப்பை தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பிறகு அவர் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த ஒரு செயல்பாட்டை வைத்து அணியில் இரண்டு ஆண்டுகளாக சிராஜ் நீடிக்கிறார். இலங்கை அணியிடம் தோற்பதெல்லாம் மானக்கேடான விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.