குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன்.. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - அண்ணாமலை

Tamil nadu Coimbatore K. Annamalai
By Sumathi Oct 31, 2022 02:40 PM GMT
Report

பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்மையில் பத்திரிக்கையாளர்களை குரங்குகளைப் போல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள் என பேசியது சர்ச்சைக்குள்ளாகியது. அதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன்.. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - அண்ணாமலை | Kovai Annamalai Press Meet

இந்நிலையில், கோவை உக்கடம் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு செய்தார். அப்போது, பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கப்பட்டது.

 பத்திரிக்கையாளர்கள் கண்டனம்

அதற்கு அவர், "பத்திரிகையாளர்களை மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீதம் நடத்துகின்றவன் நான். எங்களுக்கு நியாயமான கோபம், சில பத்திரிகையாளர்கள் மீது இருக்கிறது. அவர்கள் தவறான செய்திகளை பதிவிடுவதுதான் அதற்கு காரணம்.

எனவே, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். எப்போதும் தவறு செய்யவில்லை. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் ரத்தத்தில் அது கிடையாது. தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மன்னிப்பு  கேட்க முடியாது

அதன்பிறகு, எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக நீங்கள் கருதினால்,

என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என தெரிவித்தார்.