கூமாபட்டிக்கு வராதீங்க - ரீல்ஸ்களை நம்பி சென்றவர்களின் நிலை என்ன தெரியுமா?

Viral Video Tourism Virudhunagar
By Sumathi Jun 26, 2025 06:39 AM GMT
Report

ரீல்ஸ்களை நம்பி சென்றவர்களின் நிலை என்ன தெரியுமா?

கூமாபட்டி

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது கிராமத்திற்கு வருமாறு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

koomapatti

அதில் ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? மன அழுத்தமா? கூமாபட்டிக்கு வாங்க..

இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமி இது என கூறியிருந்தார். இந்த குக்கிராமம் ஒரு தனித்தீவு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்த கிராமத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

மனைவியின் டார்ச்சர் தாங்கல.. என்னை கருணை கொலை செய்யுங்க - கதறும் இளைஞர்

மனைவியின் டார்ச்சர் தாங்கல.. என்னை கருணை கொலை செய்யுங்க - கதறும் இளைஞர்

நிலை என்ன?

ஆனால் தற்போது அந்த அளவிற்கு செழிப்பு இல்லை என்றும் ஆறுகள் வறண்டு காணப்படுவதாகவும் இணையத்தில் பரவுவது பழைய வீடியோ என்றும் சுற்றுவட்டார மக்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் கூமாபட்டி சிறிய கிராமம்.

கூமாபட்டிக்கு வராதீங்க - ரீல்ஸ்களை நம்பி சென்றவர்களின் நிலை என்ன தெரியுமா? | Koomapatti Village Goes Viral Reason And Details

சுற்றுலாப்பயணிகள் நம்பி வரவேண்டாம். அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதுதொடர்பான ரீல்ஸ் வெளியிட்ட நபர் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.