4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட நபர் - கோவிலில் அழுது துடித்த மனைவி

Tiruvannamalai
By Sumathi Jun 25, 2025 06:46 AM GMT
Report

  4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

4 கோடி சொத்து

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட நபர் - கோவிலில் அழுது துடித்த மனைவி | Man Donate 4 Crore Property Tiruvannamalai Temple

இந்நிலையில் திருவண்ணாமலை, போளூர் அருகே படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உண்டியலில் விஜயன் என்பவர் காணிக்கையாக செலுத்திய வீட்டு பத்திரமும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்; டோக்கன் விநியோகம் - முக்கிய தகவல்

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்; டோக்கன் விநியோகம் - முக்கிய தகவல்

துடிக்கும் குடும்பம்

முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பவருக்கு மனைவி கஸ்தூரி மற்றும் சுபலட்சுமி ராஜலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தான் சம்பாதித்த 4 கோடி மதிப்பிலான இரண்டு வீட்டு பாத்திரத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

tiruvannamalai

தொடர்ந்து தனது மனைவி கஸ்தூரி மற்றும் மைத்துனர்கள் ஆகியோர் கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கோவில் உண்டியல் எண்ணும் இடத்தில் விஜயன் மனைவி மகள்கள் குடும்பத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சொத்து பத்திரம் கோவிலுக்கு சேர வேண்டும் என்று பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.