கூமாபட்டியை வைரலாக்கிய நபர் குமுறல் - உடனே கலெக்டர் சொன்ன குட்நியூஸ்

Viral Video Virudhunagar
By Sumathi Jun 27, 2025 05:06 AM GMT
Report

கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 ரூ.10 கோடியில் பூங்கா

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது கிராமத்திற்கு வருமாறு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

koomapatti

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்த கிராமத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை.

சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன், ``கூமாபட்டி போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும்,

கூமாபட்டிக்கு வராதீங்க - ரீல்ஸ்களை நம்பி சென்றவர்களின் நிலை என்ன தெரியுமா?

கூமாபட்டிக்கு வராதீங்க - ரீல்ஸ்களை நம்பி சென்றவர்களின் நிலை என்ன தெரியுமா?

ஆட்சியர் அறிவிப்பு

அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌ இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!" என தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து புதிதாக விருதுநகர் கலெக்டராக பதவியேற்றிருக்கும் மரு.என்.ஓ.சுகபுத்ரா,

virudhunagar collector

``தமிழ்நாடு முதலமைச்சரின், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.