கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு- அகழாய்வுப் பணிகள் மும்முரம்

india discovery Kondagai hut
By Jon Mar 17, 2021 02:15 PM GMT
Report

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 7-வது கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, கொந்தகை, அகரத்திலும் அகழாய்வுப் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இதுவரை கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு ஒரு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 2 அடி ஆழத்தில் ஏற்கெனவே பாசிமணிகள், சில்லு வட்டு, பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் மணலால் ஆன கூம்பு வடிவ பாத்திரம், மண் மூடிகள் கிடைத்துள்ளன. தற்போது கொந்தகையில் மூடிய நிலையில் முதுமக்கள்தாழி கிடைத்திருக்கிறது.

இப்பகுதி ஈமக்காடு பகுதியாக இருப்பதால் 6-ம் கட்ட அகழாய்விலிருந்து தொடர்ந்து முதுமக்கள் தாழி கிடைத்துள்ளன.