பாலியல் விடுதி டு மருத்துவமனை - கொல்கத்தா கொடூரத்தில் அன்று இரவு நடந்தது என்ன?

Attempted Murder Sexual harassment West Bengal Crime
By Sumathi Aug 24, 2024 02:30 PM GMT
Report

கொல்கத்தா சம்பவம் குறித்த விசாரணை தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா சம்பவம்

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

sanjay roy

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய் மட்டும்தான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று சி.பி.ஐ நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, சஞ்சய் ராய் சம்பவம் நடந்த அன்று மருத்துவமனைக்குள் நுழைந்த கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகியுள்ளது. அதில், சஞ்சய் ராய் அதிகாலை 1.03 மணிக்கு கழுத்தில் ப்ளூடூத் ஏர்போன் மாட்டிக்கொண்டு குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது - ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞர்!

கொல்கத்தா கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது - ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞர்!

விசாரணை தகவல்

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு நன்றாக மது அருந்திவிட்டு சோனாகஞ்ச் பாலியல் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்துவிட்டு அதே குடிபோதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

பாலியல் விடுதி டு மருத்துவமனை - கொல்கத்தா கொடூரத்தில் அன்று இரவு நடந்தது என்ன? | Kolkata Doctor Rape Murder Case Update

அவன் செமினார் அரங்கத்திற்கு சென்ற போது பெண் டாக்டர் தனியாக உறங்கிக்கொண்டிருந்ததை பார்த்தவுடன் குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, சஞ்சய் ராய் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.