பல் துலக்காமல் முத்தம்.. அதட்டிய மனைவியை குத்திக்கொன்ற கணவர்!
பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனை திட்டிய மனைவியை ஆத்திரமடைந்து கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியதில் அவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
ஆண் குழந்தை
பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் தேவிகா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து இருக்கிறார். இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பெங்களூருவில் வேலை செய்து வந்ததால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலக்காடு வந்து மனைவி குழந்தைகளை பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார் அவினாஷ்.
பல் துலக்காமல் முத்தம்
இந்த நிலையில் மனைவி குழந்தைகளை பார்ப்பதற்காக அண்மையில் பாலக்காடு வந்த அவினாஷ் தூங்கி எழுந்து பல் துலக்காமலேயே தனது குழந்தையை தூக்கி எடுத்து முத்தம் கொடுத்திருக்கிறார்.
பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்கக் கூடாது. வைரஸ் பிரச்சினை வரும் என்று கோபமாக சொல்லியிருக்கிறார் தீபிகா. இதனால் ஆத்திரமடைந்த அவர் தீபிகாவிடம் கோபத்தைக் காட்ட , இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
கத்தி குத்து
இந்த வாக்குவாதம் முற்றிய போது அங்கிருந்த கத்தியை எடுத்து தீபிகாவை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
தீபிகாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு அவரின் கணவர் அவினாஷை கைது செய்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாள் பிரச்சனை எதுவும் இருந்து வந்திருக்கிறதா? நீண்டநாள் பிரச்சனையால்தான் தீபிகாவை சரமாரியாக குத்திக் கொலை செய்திருக்கிறாரா?
திட்டமிட்டு கொலை செய்து இருக்கிறாரா அல்லது அன்றைக்கு நடந்த வாக்குவாதத்தின் போது தான் ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாண்ட்விச்சில் அதிகமான மயோனைஸ்.. ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர்! என்ன நடக்குது?