போலீசார் துப்பாக்கி சூடு: ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை

people myanmar kill civilians
By Jon Mar 28, 2021 10:56 AM GMT
Report

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தில் மட்டும் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, போராட்டக்காரர்களை போலீசார் சுட்டுக் கொல்லும் வன்முறையும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தி வலைதளமான மியான்மா் நவ், நேற்றைய போராட்டத்தின்போது 91 போ போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து மியான்மருக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மியான்மரில் கொண்டாடப்பட்ட 76-ஆவது முப்படைகள் தினம், அந்த நாட்டுப் படைகளின் வன்முறை நிறைந்த அவமான தினமாக என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.