நண்பர்களுடன் ரைடு..சிதைந்த உடல்கள் - கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூரம்!
காவேரிப்பட்டணம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் கனிஸ்கர் 19 வயதாகும் இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தனது நண்பர்களான வசந்தகுமார் (27), ஞான பாதப்பட்டி விஜி (26) ஆகியோருடன் தருமபுரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வந்தபோது, எதிரே வந்த பார்சல் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் வசந்த குமார், விஜி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராகுல் கனிஸ்கர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயிரிழந்த சம்பவம்
இதனையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனையடுத்து விபத்து குறித்து காவேரிப் பட்டணம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில்
பார்சல் லாரியை ஓட்டிவந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (38) மதுபோதையிலிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.