தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்ததால் வந்த வினை - கைதான கிளி ஜோசியர்..!

Anbumani Ramadoss Dr. S. Ramadoss PMK
By Karthick Apr 09, 2024 10:52 AM GMT
Report

 கடலூரில் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.

கடலூர் வேட்பாளர்

கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார் நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தங்கர் பச்சான்.

kili-josiyar-arrested-thangar-bachchan-cuddalore

தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், அண்மையில் பிரச்சாரத்தின் நடுவே சாலையோரம் அமர்ந்திருந்த கிளி ஜோசியரிடம் குறி கேட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

பாமக வேட்பாளரான இயக்குனர் தங்கர்பச்சன் - வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்..!

பாமக வேட்பாளரான இயக்குனர் தங்கர்பச்சன் - வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்..!

கைது

இதனை தொடர்ந்து தற்போது அந்த கிளி ஜோசியக்காரர் பெரும் சிக்கலை சந்தித்துள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

kili-josiyar-arrested-thangar-bachchan-cuddalore

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வேட்பாளருக்கு ஜோசியம் பார்த்ததால் தந்து வாழ்வாதாரத்தை ஒருவர் இழந்துள்ள சம்பவம் அரசியல் பிரச்சார இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.