தொடர் விமர்சனத்தில் விராட் கோலி- காரணம் என்ன?
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். சென்னையில் இதே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி . இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி, 130 ரன்களைக் கடந்துள்ளது. கில், புஜாரா, கோலி ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.
அதுவும் இந்திய அணியின் கேப்டன் விராட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் சமூக வலைதளங்களில் கோலி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். கடைசி பத்துப் போட்டிகளில் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை என இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
