ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார் கோலி

csk rcb ipl srh kholi
By Jon Apr 01, 2021 11:39 AM GMT
Report

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் சென்னையில் மோதுகின்றன. ஐபிஎல் 2021 வருகிற ஏப்ரல் 9ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் வழக்கம்போல தங்களது சொந்த மைதானங்களில் விளையாடாமல் ரெண்டம் முறையில் விளையாட உள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்ற. நேற்று மும்பை அணியின் கேப்டன் சென்னை வந்துட்டோம் என்று பதிவிட வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது பெங்களூரு அணி கேப்டன் கோலி அவர்களும் சென்னை வந்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் அணி நிர்வாகம் தெரிவித்ததாவது, “நாங்கள் இணையதளத்தில் இன்றைய நாளுக்கான பிரேக்கிங் செய்தியை பகிர்வோம் என நீங்கள் நினைத்திருந்தால் அது குறித்து சிந்தியுங்கள். அதனை உறுதி செய்ய விரும்புகிறோம். கேப்டன் கோலி சென்னை வந்துள்ளார்” என அந்த பதிவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.