அழகும் இல்ல..வேலையும் இல்ல.. டார்ச்சல் செய்த கணவர் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
திருமணமான இளம்பெண் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த விஷ்ணுஜாவுக்கும் செவிலியராக பணிபுரிந்து வந்த பிரபினுக்கும் மே 2023 ஆம் ஆண்டும் மே மாதம் திருமணம் நடந்தது. இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் பிரபினுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
திருமணம் முடிந்து 3 மாதம் கழித்து பிரபின் விஷ்ணுஜாவை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், விஷ்ணுஜா கடந்த வாரம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இவரது இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி விஷ்ணுஜாவின் பெற்றோர் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அழகும் இல்லை, வேலையும் இல்லை எனக் கூறி எனது மகளை பிரபின் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
டார்சல்
இதனால் பிரபீன் விஷ்ணுஜாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக விஷ்ணுஜா அவரது நண்பர் ஒருவர் கூறியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், பிரிபினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கொடூரம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவலர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.