சிப்ஸ் தர மறுத்த இளைஞரை ஓட, ஓட கொடூரமாக தாக்கிய கும்பல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
சிப்ஸ் தர மறுத்த இளைஞரை ஒரு கும்பல் சராமரியாக தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொடூரத் தாக்குதல்
அந்த வீடியோவில், நேற்று கேரளா, கொல்லம் வலத்துங்கல் பகுதியில், குடிகார கும்பல் ஒன்று மதுக்குடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, அந்த வழியாக 19 வயது இளைஞர் ஒருவர் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வந்துள்ளார். அந்த குடிகார கும்பல் அந்த இளைஞரிடம் சிப்ஸ் கேட்டுள்ளது.
ஆனால், அந்த இளைஞர் தர மறுத்ததால், அவரை ஓட ஓட மடக்கிப் பிடித்து, 8 பேர் கொண்ட கும்பல் சராமரியாக கொடூரமாக தாக்கியுள்ளது.
வலுக்கும் கண்டனங்கள்
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
A man has been arrested in connection with the brutal beating of a 19-year-old man by a gang of 8 for not giving him potato chips after asking for them. Kerala,Kollam a native of Valathungal, was brutally beaten up by a gang of drunkards on Tuesday. pic.twitter.com/QViqmKyeC8
— Prasad K Velayudhan (@PrasadKVelayud1) August 3, 2022