14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் விஷம் ஊற்றி கொடூரமாக கொன்ற தந்தை - பகீர் பின்னணி!
14 வயது சிறுமியை தந்தை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் விவகாரம்
கேரளா, ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது (43). கொச்சியில் உள்ள வல்லார்பாடம் முனையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஃபாத்திமா(14), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
இந்நிலையில், முனையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்த நிலையில் மகள் - தந்தைக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
கொடூர கொலை
மேலும், காதலித்த சிறுவன் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் தந்தை, பாத்திமாவை அடித்து தாக்கியுள்ளார். தொடர்ந்து, தனது முடிவில் மாறாமல் மகள் இருந்ததால் ஆத்திரத்தை அவரை இரும்பு கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்தையும் ஊற்றியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய பாத்திமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் தந்தை அபீஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.