கேரள நரபலி: பிரிட்ஜில் 10கிலோ மனித இறைச்சி, எலும்புத் துண்டுகள் - அதிர்ச்சி ஆதாரங்கள்

Kerala Crime
By Sumathi Oct 16, 2022 07:10 AM GMT
Report

கேரள நரபலி விவகாரத்தில், 10கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்பு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 நரபலி 

கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் போலி மந்திரவாதியான ஷாபி மற்றும் மருத்துவர் பகவல் சிங் அவரது மனைவி லைலாவையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் இந்த நரபலி நடைபெற்றதாக கூறப்பட்டது.

கேரள நரபலி: பிரிட்ஜில் 10கிலோ மனித இறைச்சி, எலும்புத் துண்டுகள் - அதிர்ச்சி ஆதாரங்கள் | Kerala Human Sacrifice Case

இதனையடுத்து நரபலி நடந்த பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய்களுடன் ஆய்வு நடத்தி வரும் போலீசார், வீட்டின் பின்புறம், உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதிர்ச்சி ஆதாரங்கள்

இந்த நிலையில், நரபலி கொடுத்து வந்த பகவல்சிங் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், பிரிட்ஜில் இருந்து 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து பகவல்சிங் வீட்டைச் சுற்றி சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 26 பெண்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 14 பெண்களும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் போயுள்ளனர்.

இவர்களும் நரபலி கொடுக்கப்பட்டிருப்பார்களா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.