இத பண்ணவே கூடாது: மணப்பெண்ணிடம் அக்ரீமெண்ட் எழுதி வாங்கிய மாப்பிள்ளை நண்பர்கள்

Kerala Marriage Viral Photos
By Sumathi Nov 10, 2022 11:41 AM GMT
Report

தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி வழங்க வேண்டி மணப்பெண்ணிடம், மாப்பிள்ளை நண்பர்கள் கையெடுத்து வாங்கியுள்ளனர்.

திருமணம்

கேரளா, பாலக்காட்டை சேர்ந்தவர் ரகு. இவருக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட ரகுவின் நண்பர்கள் மணப்பெண்ணிடம், தங்கள் நண்பனை இரவு 9 மணி வரை எங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி

இத பண்ணவே கூடாது: மணப்பெண்ணிடம் அக்ரீமெண்ட் எழுதி வாங்கிய மாப்பிள்ளை நண்பர்கள் | Kerala Groom Friends Signs Contract With Bride

ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தை வாங்கினர். மலையாலத்தில் எழுதப்பட்ட ரூ.50 பத்திரத்தில் மணமகள் அர்ச்சனா கையெழுத்திட்டுள்ளார். அதில், திருமணத்திற்குப் பிறகும் என் கணவர் ரகு.எஸ் கேடிஆர் இரவு 9 மணி வரை அவரது நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவார்.

அக்ரீமெண்ட் 

அந்த நேரத்தில் நான் அவரை தொலைபேசியில் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு சாட்சிக்கு இருவரும் கையெழுத்து போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல், அசாமில் திருமணத்தில் மணமகன் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.