மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்சியர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
திருவனந்தபுரம் துணை ஆட்சியர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாவட்டம்
கேரள மாவட்டம் கண்ணனூர் மாவட்டத்தில் துணைக் ஆட்சியராக நவீன் பாபு பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டத்திற்குப் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பணியில் சென்று சேருவதை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. மேலும் துணை ஆட்சியர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
தற்கொலை
இதனால் பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மனம் உடைந்து இன்று(அக்.,15) அவரது வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை நவீன் பாபு உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.