தகாத உறவில் தங்கை; சீர்வரிசை கொண்டு போன அண்ணன் - கொதித்த கணவன்!

Attempted Murder Telangana Relationship Crime
By Sumathi Oct 14, 2024 01:00 PM GMT
Report

தங்கையின் கள்ளக்காதலனை அண்ணன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தகாத உறவு

தெலங்கானா, சிங்கரேணி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தவர் வினய்(30). இவருக்கு அஞ்சலி(25) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அஞ்சலிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

தகாத உறவில் தங்கை; சீர்வரிசை கொண்டு போன அண்ணன் - கொதித்த கணவன்! | Brother Killed Sisters Lover For Affair Telangana

ஆனால், நாளடைவில் வினய்க்கும், அஞ்சலிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இதனையறிந்த அஞ்சலின் கணவனும், அண்ணனும் கண்டித்துள்ளனர். ஆனால், அஞ்சலி அதற்கு செவிசாய்க்காமல் உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் சண்டை வெடிக்கவே, அஞ்சலி வினய்யுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த வினய் பெற்றோர், மகன் விருப்பத்திற்காக அந்த உறவை ஏற்றுள்ளனர். மேலும், தனியாக வீடு எடுத்து இருவரையும் வாடகைக்கு வைத்துள்ளனர்.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

 கணவன் வெறிச்செயல் 

இதற்கிடையில் அஞ்சலியை தேடி அலைந்த அண்ணன், அவருடன் போனில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது அப்பகுதியில் சத்துலபதுகம்மா திருவிழா வருவதால், பிறந்த வீட்டின் சீர் செய்வது முறை. எனவே, வினய்யை மட்டும் நான் சொல்லும் இடத்துக்கு அனுப்பி வைத்தால், அவருடன் சேர்ந்து உன் வீட்டிற்கு நானே சீர்வரிசைகளை கொண்டு வருகிறேன்.

தகாத உறவில் தங்கை; சீர்வரிசை கொண்டு போன அண்ணன் - கொதித்த கணவன்! | Brother Killed Sisters Lover For Affair Telangana

நீ உன் விருப்பப்படியே வாழலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அஞ்சலி வினய்யை அனுப்பி வைத்துள்ளார். அவரும் அண்ணனை சந்தித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், கூடவே அஞ்சலியின் கணவரும் வந்துள்ளார்.

தொடர்ந்து வினய்யை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பொயோடியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வினய் உயிரிழந்துள்ளார். உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் சடலத்தை மீட்டு, தப்பியோடிய அஞ்சலியின் கணவரையும், அண்ணனையும் தேடி வருகின்றனர்.