படிக்காமலேயே 26 வழக்குகளில் ஆஜராகி வெற்றி; சிக்கிய போலி வக்கீல் - பின்னணி!
சட்டக்கல்வி பயிலாமலேயே 26 வழக்குகளில் போலி வழக்கறிஞர் வெற்றி பெற்றுள்ளார்.
வழக்குகளில் வெற்றி
கென்யாவைச் சேர்ந்தவர் பிரையன் முவெண்டா. இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், சமரசத் தீர்வு மையம் என பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி, வாதாடி, 26 வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் மீது தொடர்ச்சியாக பொதுப் புகார்கள் பெறப்பட்ட நிலையில், அவரது கல்விச் சான்றிதழ்காள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தான் அவர் வழக்கறிஞர் படிப்பையே படிக்கவில்லை.

இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி திடுக்கிடும் தகவல்..!
சிக்கிய வக்கீல்
இவ்வளவு நாளாகப் போலி வழக்கறிஞராக வலம் வந்துதான் இவ்வளவு வழக்குகளையும் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. அதே சமயம், சட்டம் படிக்காமலேயே இவ்வளவு திறமையாக வழக்கு நடத்தி, வாதாடி வெற்றி பெற்ற இவர் குறித்து கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர்.