ரோகித், கோலியாக இருந்தாலும் சரி.. ஸ்ரேயாஸ், இஷானை மட்டும் தண்டிப்பது சரியல்ல - கீர்த்தி ஆசாத்

Rohit Sharma Shreyas Iyer Virat Kohli Indian Cricket Team Ishan Kishan
By Sumathi Mar 01, 2024 07:37 AM GMT
Report

அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென கீர்த்தி ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை

இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 பேரும் நீக்கப்பட்டனர்.

shreyas-and-ishaan

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கீர்த்தி ஆசாத், நீங்கள் ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.

9 நட்சத்திர வீரர்கள் நீக்கம்; பிசிசிஐ வைத்த ஆப்பு - யாரெல்லாம் தெரியுமா?

9 நட்சத்திர வீரர்கள் நீக்கம்; பிசிசிஐ வைத்த ஆப்பு - யாரெல்லாம் தெரியுமா?

 கீர்த்தி ஆசாத் ஆதங்கம்

ஏனெனில் மாநிலம்தான் உங்களுக்கு ஒரு வீரராக வாய்ப்பு கொடுத்தது. அங்கிருந்துதான் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்தீர்கள். அதனால் ஸ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல. அனைவரையும் தண்டிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

keerthy-azad

அப்போதெல்லாம் நாங்கள் எங்களுடைய மாநில அணிக்காக மிகவும் பெருமையுடன் உள்ளூரில் விளையாடுவோம். அந்த பெருமையான உணர்வை தற்போதைய இளம் வீரர்களிடம் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.