ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் - சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.
கேதர் ஜாதவ்
39 வயதான இவர், மஹாராஷ்டிர உள்ளூர் அணிக்காக ஆடினார். 2014 ல் இந்திய அணியில் இணைந்த கேதர் ஜாதவ் இந்தியாவுக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டரான கேதர் ஜாதவ், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (3 ஜூன் 2024 ) அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில், அவர் கிரிக்கெட் வாழ்க்கையின் ஸ்லைடு ஷோ வீடியோ உடன் "1500 மணிநேரத்தில் இருந்து எனது வாழ்க்கை முழுவதும் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி. அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் என்னை ஓய்வு பெற்றவராக கருதுங்கள்" என பதிவிட்டு தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை, டெல்லி , பெங்களூர், கொச்சி ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார்.