நீண்ட நாள் பிரச்சனை -பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்த கதிர் ஆனந்த்!!

DMK Durai Murugan Lok Sabha Election 2024
By Karthick Apr 16, 2024 12:53 PM GMT
Report

நடைபெறும் மக்களவை தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் கதிர் ஆனந்த்.

கதிர் ஆனந்த்

திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கடந்த முதல் முறையாக 2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

kathir-anand-election-promise-to-people

அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது 2-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மக்களிடம் 10 ஆண்டு பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

மோடி மீண்டும் வந்தால்...நாட்டின் கஜானாவே காலியாகிடும் - கதிர் ஆனந்த் எச்சரிக்கை

மோடி மீண்டும் வந்தால்...நாட்டின் கஜானாவே காலியாகிடும் - கதிர் ஆனந்த் எச்சரிக்கை

வாக்குறுதி

இந்த சூழலில் தான் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி பகுதிகளில் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

kathir-anand-election-promise-to-people

பிரச்சாரத்தின் போது, பத்தலப்பள்ளி பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என கதிர் ஆனந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.