ஜம்மு - காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகள்
kasmir-army-pakistan-india-bomb
By Jon
ஜம்மு - காஷ்மீரில் கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் நாசவேலைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நாசவேலைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராஷ்டிரீய ரைபிள் படையினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தூர் செக்டாரில் உள்ள கோலத் ரீலன்-மெந்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வீரர்கள் சந்தேகத்தின் பேரில் ஒரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 2.4 கிலோ எடையுள்ள கையெறி குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய வீரர்கள், அதில் இருந்த கையெறி குண்டுகளை பத்திரமாக அகற்றி செயலிழக்கச் செய்தனர்.