தவறான பழக்கங்களுக்கு அடிமையான கார்த்தி ஷூட்டிங்கில் செய்த காரியம் - போட்டுடைத்த தயாரிப்பாளர்

Karthik Tamil Actors Star Movie
By Vidhya Senthil Aug 25, 2024 11:25 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

 நவரச நாயகன் கார்த்திக் படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் குறித்து, தயாரிப்பாளர்  ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 நவரச நாயகன்

தமிழ் சினிமாவில் 80களின் கால கட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தனது நடிப்பால் ரசிகர், ரசிகைகளைக் கட்டிப்போட்டவர். தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்து  நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் . நடிகர் கார்த்திக் குறித்து நம்மில் பலருக்கும் சில விஷயங்கள் தெறித்திருக்ககூடும்.

தவறான பழக்கங்களுக்கு அடிமையான கார்த்தி ஷூட்டிங்கில் செய்த காரியம் - போட்டுடைத்த தயாரிப்பாளர் | Karthik Worst Behavior Producer Chakravarthy Movie

ஆனால் சக்கரவர்த்தி படப்பிடிப்பில் கார்த்திக் நடந்து கொண்ட விதம் குறித்து, தயாரிப்பாளர் பாலாஜியின் மகன் பாலாஜி பிரபு youtube chennalலில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில், “ கார்த்திக் சில தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதால் அவரால் ஒழுங்காகப் படப்பிடிப்பிற்கு வர முடியவில்லை.

சினிமாவிற்கு வந்து சில வருடங்களில்  அவர் நடித்த வருஷம் 16 பிரம்மாண்ட  வெற்றி  படமாக ஆக ஓடிக்கொண்டிருந்தது . இந்த நேரத்தில் தான் சட்டத்தின் திறப்பு விழா படத்திற்கான தேதிகளைக் கொடுத்தார் கார்த்திக். ஆனால், அந்தப் படத்தில் எங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லையென்றாலும், நஷ்டம் அடையவில்லை.

 

15 வயதிலேயே திருமணம்; நடுத்தெருவில் நின்றேன் - பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

15 வயதிலேயே திருமணம்; நடுத்தெருவில் நின்றேன் - பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

அப்படியெல்லாம் தொல்லை ...

எங்களது அடுத்த படமான சக்கரவர்த்தி படத்தில் நடிகர் கார்த்திக்  நடிக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டது . ஆனால் அவர் சொன்ன தேதிகளில் ஒழுங்காக வராமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதனால் அப்பா மிகவும் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து வேறொரு படப்பிடிப்பில் இருந்த கார்த்திகை பார்ப்பதற்கு, அப்பா அடியாட்களுடன் சென்றார்.

தவறான பழக்கங்களுக்கு அடிமையான கார்த்தி ஷூட்டிங்கில் செய்த காரியம் - போட்டுடைத்த தயாரிப்பாளர் | Karthik Worst Behavior Producer Chakravarthy Movie

இதைத் தெரிந்து கொண்ட கார்த்திக் ஓடி ஒளிந்து கொண்டார். பொதுவாக கார்த்திக் படப்பிடிப்பிற்கு வரக்கூடாது என்று முடிவெடுத்து விட்டால், வேண்டுமென்றே மருத்துவமனைக்குச் சென்று ட்ரிப் ஏற்றிக்கொள்வார். அதற்காக அவர் ஒரு சிறப்பு மருத்துவரையும் வைத்திருந்தார்.

இதனைப் பார்க்கும் தயாரிப்பாளர்கள், எதுவும் சொல்ல முடியாமல் திரும்பி வந்து விடுவார்கள். அப்படியெல்லாம் தொல்லை கொடுத்தவர்தான் கார்த்திக் என்று தயாரிப்பாளர் மகன் தெரிவித்துள்ளார்.