90’ஸ் கிட்ஸ்க்கு வந்த சோதனை; பொண்ணு கிடைக்கனும் - பாதயாத்திரை சென்ற இளைஞர்கள்!
திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி இளைஞர்கள் பாதயாத்திரை சென்றுள்ளனர்.
விவசாயம்
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர். அதற்கு காரணமாக தற்போது லட்சக்கணக்கில் சம்பளம், சொந்த கார், வீடு பெண் வீட்டார் எதிர்பார்ப்பு மலைக்க வைக்கிறது.
இந்நிலையில், கர்நாடகா, கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. மேலும், அவர்கள் விவசாயம் செய்கிறார்கள் என்பதற்காகவே பெண் கொடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது.
பாதயாத்திரை
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர். திருமணம் செய்ய பெண் கிடைக்கவும்,
நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இவ்வாறு பாதயாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.