மணமகள் கிடைக்கும் வரை போராட்டம் : திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் செய்த விநோத போராட்டம்

By Irumporai Dec 22, 2022 11:27 AM GMT
Report

திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பெண் வேண்டும் 

நாட்டில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சரிவு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத காரணத்தால் ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணமகள் கிடைக்கும் வரை போராட்டம் : திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் செய்த விநோத போராட்டம் | Collector Office Getting Brides For Marriage

இந்த சம்பவம் மாராட்டிய மாநிலம் சோலாப்பூரில் அரங்கேறியுள்ளது, இதில் திருமணமாகாத ஆண்கள் இணைந்து பேரணி நடத்தியுள்ளனர்.

 விநோத ஆர்பாட்டம் நடத்திய ஆண்கள்

 அதில், சில மணமகன்கள் ராஜ அலங்கார உடை அணிந்து கொண்டு குதிரையில் அமர்ந்துகொண்டு தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுகொடுத்தனர்.

அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.