வேன் மோதி கோரவிபத்து - 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

Karnataka Accident Death
By Sumathi Jun 28, 2024 04:53 AM GMT
Report

வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேன் மோதி விபத்து

புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டேனஹள்ளி கிராஸ் அருகே லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, லாரி மீது டெம்போ வேன் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

karnataka

குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி பரசுராம் (45), பாக்யா (40), நாகேஷ் (50), விசாலாட்சி (50), சுபத்ரா பாய் (65), புண்யா (50), மஞ்சுளா பாய் (57), ஆதர்ஷ் (23, ஓட்டுநர்), மானசா (24), ரூபா (40), மஞ்சுளா (50), 4 வயது குழந்தை, 6 வயது குழந்தை ஆகியோர் அடையாளம் கானப்பட்டுள்ளனர்.

வேன் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

வேன் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

13 பேர் பலி

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் மோதி கோரவிபத்து - 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி! | Karnataka Truck Accident 13 Died

உடனே, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.