வேன் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

Tamil nadu Death
By Thahir Feb 26, 2023 07:33 AM GMT
Report

காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

5 பேர் உயிரிழப்பு 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் லாரி மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Truck collides with van accident - 5 killed

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திதி கொடுத்து விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.