ராமாயணம், மகாபாரதம் வெறும் கற்பனை; நிஜமல்ல - பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்!

Karnataka
By Sumathi Feb 14, 2024 04:10 AM GMT
Report

வெறுப்புணர்வைத் தூண்டியதாக பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெடித்த போராட்டம்

கர்நாடகா, மங்களூருவில் செயின்ட் தெரேசா என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அருட்சகோதரி பிரபா (32) என்பவர் சமூகவியல் ஆசிரியராக‌ பணியாற்றி வந்தார்.

karnataka

அவர் பாடம் நடத்துகையில், ராமாயணம், மகாபாரதம் ஆகியவை நிஜமல்ல கற்பனை புராணங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. உடனே, இதுகுறித்து மாணவர்கள் அவர்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் கைதிகளுடன் உல்லாசம்; கள்ளத்தொடர்பு அம்பலமானதால் பெண் காவலர்கள் பணி நீக்கம்

சிறையில் கைதிகளுடன் உல்லாசம்; கள்ளத்தொடர்பு அம்பலமானதால் பெண் காவலர்கள் பணி நீக்கம்

ஆசிரியை பணி நீக்கம்

தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பான தகவலறிந்த பாஜக, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகியஅமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பிரதமர் மோடி, ராமர் கோயில் பற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியை அவதூறாக பேசியதால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

ராமாயணம், மகாபாரதம் வெறும் கற்பனை; நிஜமல்ல - பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்! | Karnataka Teacher Fired For Ramayana

இதனையடுத்து, பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி அனிதா விடுத்த அறிக்கையில், ‘‘எங்களது பள்ளியில் இதுவரை வகுப்புவாத விவகாரம் குறித்து எந்த புகாரும்எழவில்லை. தற்போது துரதிருஷ்டவசமாக ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் மீது சில பெற்றோர் நம்பிக்கையை இழந்திருக்கின்றனர்.

அவர்களின் நம்பிக்கையை தக்க வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்'' என தெரிவித்துள்ளார்.