விரல் காணிக்கை - ரத்ததால் வேண்டுகோள் - மோடி மீண்டும் பிரதமராக முரட்டு காணிக்கை ..!

Narendra Modi Karnataka
By Karthick Apr 07, 2024 07:00 AM GMT
Report

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என வேண்டுதலை வைத்து கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தனது விரலை காணிக்கை கொடுத்துள்ளார்.

மோடி

நாட்டின் பிரதமரான மோடி உலகளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவராக திகழ்கிறார். மோடியின் வளர்ச்சி அவரை முக்கிய தலைவராக நிலைநிறுத்தியுள்ளது மட்டுமின்றி இந்தியா மீதும் தனி கவனம் பெற வைத்துள்ளார்.

karnataka-man-offers-finger-for-modi

குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மோடி அலை என்ற தாக்கத்தின் காரணமாக 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதினார்.

10 ஆண்டு ஆட்சி Trailer தான் - இனிமேல் தான்...! ஹெச்.ராஜா பரபரப்பு கருத்து

10 ஆண்டு ஆட்சி Trailer தான் - இனிமேல் தான்...! ஹெச்.ராஜா பரபரப்பு கருத்து

2019-யிலும் மோடி அலை கைகொடுக்க தற்போது பிரதமராக 10 ஆண்டுகளை நெருங்கி விட்டார். மீண்டும் தேர்தலுக்கு மோடி தயாராகிவரும் நிலையில், அவருக்காக தீவிர தொண்டர் ஒருவர் காணிக்கை கொடுத்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

விசித்திர வேண்டுதல்

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அருண் வர்ணேகர் என்பவர், தனது இடது கையின் ஆள்காட்டி விரலைத் துண்டித்து காளி கோவிலுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.

karnataka-man-offers-finger-for-modi

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டும் என்று வேண்டி, காளி தேவிக்கு பலியாக இந்த தீவிர செயலை செய்துள்ளார் அருண். இவர் தனது வீட்டில் பிரதமருக்கு ஒரு கோயிலையும் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

karnataka-man-offers-finger-for-modi

தனது விரலைத் துண்டித்த அவர், இரத்தத்தைக் கொண்டு தனது வீட்டுச் சுவர்களில் ஒரு வேண்டுகோளை பொறித்து, காளி தேவியிடம் 'மோடி பாபா'வைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.