இனி அலுவலகங்களில் 10 மணி நேர வேலை - அரசு முடிவு
வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
10 மணி நேர வேலை
கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு இதுவரை 9 மணி நேர வேலை திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்ட திருத்தத்தின்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாகவும், கூடுதல் நேர பணியையும் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு முடிவு
இந்த புதிய வேலை நேரத் திட்டம் அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. அரசு பணி நேரத்தை நீட்டிப்பதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\
தொடர்ந்து, இந்த புதிய வேலை நேரத் திட்டம் அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பொருந்தும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தில் ஒரு நாளைக்கு தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர்கள் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.