இறுக்கமான உடை அணியாததால் கணவரும், மாமியாரும் அடிச்சாங்க - பிரபல நடிகை பகீர்!
இறுக்கமான உடையை அணியாததால் தன்னை தனது கணவரும் மாமியாரும் அறைந்தார்கள் என பிரபல நடிகை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரிஷ்மா கபூர்
பாலிவுட்டின் கபூர் குடும்பத்தை சேர்ந்த கரிஷ்மா கபூர் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் சகோதரி. 90களில் முன்னணியில் வலம் வந்தவர். தற்போதும் விடாமல் நடித்து வருகிறார். சினிமாவில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
அஜய் தேவ்கனுடன் 1992 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை டேட்டிங்கில் இருந்தார். அதன்பின் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்த கரிஷ்மா கபூருக்கு அவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லவில்லை.
பகீர்
தொடர்ந்து 2003ஆம் ஆண்டு சஞ்சய் கபூர் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் கியான் என்ற மகனும் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில்,
அவருக்கு மாமியார் ஆடை ஒன்றை பரிசளித்துள்ளார். ஆனால் கரிஷ்மா குழந்தை பிறந்த பிறகு எடை அதிகரித்ததால் ஆடையை அணிய முடியவில்லையாம். அதனால் அதனை அணிய மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது கணவர் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் மாமியாரும் அறைந்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.