சத்தம் போடாமல் திடீரென திருமணம் செய்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்...!
சத்தம் போடாமல் திடீரென திருமணம் செய்த பிரபல நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை பூர்ணா
சினிமாத்துறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்தவர் பிரபல நடிகை பூர்ணா. இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து, கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார்.
சத்தம் இல்லாமல் திருமணம் செய்த நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலி என்பவரை காதலித்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த பூர்ணாவும், ஆஷிஃப்பும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்க்ததில் நடிகை பூர்ணா புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், "சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை.
நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம்.
இது கொஞ்சம் அதிகம் என்று எனக்குத் தெரியும், இன்ப துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.