டிவியில் கிடைத்த ஆதாரம்!!பிக் பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளரை கைது செய்த காவல் துறையினர்!!

Bigg Boss Karnataka
By Karthick Oct 23, 2023 12:52 PM GMT
Report

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் ஒருவர் கைதாகி இருப்பது குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நடைபெற்று வருகிறது. முந்தைய வருடங்களை போல இந்த வருடமும், எந்த வித பரபரப்புக்கும் குறைவில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. நேற்றைய ஏவிக்ஷனில் விஜய் வர்மா வெளியேற்றபற்றிருந்தார். 

kannada-bigg-boss-contestant-arrest-tiger-chain

தமிழை போலவே மற்ற மொழிகளிலும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது. கன்னட மொழியிலும் இந்நிகழ்ச்சி 10-வது சீசனாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் தான் தற்போது காவல் துறையினர் போட்டியாளர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்த போலீஸ் 

வர்தூர் சந்தோஷ் என்பவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் அணிந்திருந்த செயின் தான் தற்போது அவருக்கு பிரச்சனையாக மாறியுளளது. தனது குடும்ப செயினை அணிந்திருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

பல தலைமுறைகளாக கடந்து வந்த குடும்ப குலதெய்வ சொத்து தான் இந்த புலி நகம் கொண்ட செயின் என வர்தூர் சந்தோஷ் கூறிய நிலையிலும், புலி நகத்தை அணிவது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 ஐ மீறுவதாகும்.

kannada-bigg-boss-contestant-arrest-tiger-chain

இந்த சட்டப்படி விலங்குகளின் உறுப்புகள் அல்லது பாகங்களை அணிவது அல்லது அவற்றை காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சட்டத்தை மீறியதன் காரணமாக தற்போது வர்தூர் சந்தோஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். 

அவரை வரும் 23-ஆம் தேதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான செய்திகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.