சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி - முதல்வரை விமர்சித்த கனிமொழி

dmk edappadi kanimozhi aiadmk
By Jon Mar 23, 2021 06:35 PM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி கனிமொழி இன்று காலை பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “பேசிய கனிமொழி, தமிழக மக்களுக்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்றது இந்த அதிமுக அரசு.

டெல்லியில் தமிழகத்தை அடகு வைத்து விட்டது. 10 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்த அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார்கள். திமுக வந்தவுடன் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திமுகவை பார்த்து பச்சோந்தி என சொல்கிறார். அவர் தான் தினமும் ஒவ்வொரு வண்ணத்தில் மாறிக் கொண்டிருக்கிறார்.

தமிழக ஆட்சியை டெல்லி அரசு தான் நடத்துகிறது. தமிழ்நாட்டின் ஆட்சி இங்கேயே நடக்கவேண்டும் என்றால் திமுக அரியணை ஏறவேண்டும். மேலும், தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கிய துரோகம் செய்தவர் பழனிசாமி என்றும் பெண் போலீஸ் அதிகாரிக்கு பாதுகாப்பில்லாத மோசமான ஆட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.