சசிகலா அரசியலுக்கு ஆதரவு கொடுக்கின்றாரா கனிமொழி?
சசிகலா அரசியலுக்கு வரலாம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தருமபுரியை அடுத்த பழைய தருமபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி அளித்த பேதமிழக அளவில் 85 சதவீதமாக உள்ள கல்வியறிவு, தருமபுரி மாவட்டத்தில் 67 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், தன் மாவட்டத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குடிமராமத்து பணிகள் நடக்காமல் பல இடங்களில் குளங்கள் மூடப்பட்டு, பிளாட் போட்டு விற்கபடுவதாக கூறினார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது ஓபிஎஸ்ஸின் கனவாக உள்ளது. குழப்பம் அவரது கட்சியில் உள்ள குழப்பங்களை சரி செய்தாலே ஓரளவுக்காவது வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்கலாம் என கூறிய கனிமொழி.
யார் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. சசிகலா அரசியலுக்கு வரலாம், வேண்டாம் என நான் கூறவில்லை, கூறவும் முடியாது என்றார் கனிமொழி. இது வரை சசிகலாவிற்கு ஆதரவானவர்களே அவரை அரசியலுக்கு வரலாம் என கூறிய நிலையில், தற்போது சசிகலா அரசியலுக்கு வரலாம் என கனிமொழி கூறியிருப்பது கொஞ்சம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட பெரும்பாலானோர் சசிகலா அரசியலுக்கு வரலாம் என கூறும் நிலையில். சசிகலா என்ன முடிவினை எடுக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.