மாதம் ரூ.1000 உரிமைத்தொகை; காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் - இனி எப்போது?

Tamil nadu DMK Money
By Sumathi Jun 10, 2025 08:30 AM GMT
Report

விடுபட்ட மகளிருக்கு எப்போது உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உரிமை தொகை

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பரில் செயல்படுத்தப்பட்டது. அந்தவகையில் தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன.

magalir urimai thogai

அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

ஒரே ஆண்டில் தமிழகத்தில் இத்தனை குழந்தை திருமணங்களா? நயினார் பகீர் தகவல்

ஒரே ஆண்டில் தமிழகத்தில் இத்தனை குழந்தை திருமணங்களா? நயினார் பகீர் தகவல்

அமைச்சர் தகவல்

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு விரைந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

minister murthy

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.