அம்ம்ம்மா... எனக்கு பேச்சு வருகிறது : சரஸ்வதி சபத பாணியில் பதிவு போட்ட நித்யானந்தா
எப்போதும் தன்னை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கென தனி தேசத்தை உருவாக்கி அதில் தன்னையே கடவுளின் அவதாரமாக கூறிக்கொண்டு தனது பக்கதர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார் நித்யானந்தா.
ஆனால் கடந்த சில காலமாக தான் சமாதி நிலையில் இருப்பதாக தகவல் வெளியிட்டார், ஆனால் சில நாட்களாக நித்தி பற்றி சில அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியனாது அதில் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ,எனக்கு எண்ட் கார்டு பேடுறீங்களா என்று வடிவேலு பாணியில் தனது முகநூல் பக்கத்தில் தான் சமாதி நிலையில் இருந்தாலும் தனது உடல் நிலையினை மருத்துவர்கள் கவனித்து வருவதாக அறிக்கை விட்டார்.
எனக்கு பேச்சு வருகிறது
இந்த நிலையில் தற்போது நித்யானந்தா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் : நான் தொடர்ந்து துரியதிதா மாநிலத்தில் நிர்விகல்ப சமாதியில் இருக்கிறேன், மேலோட்டமான தன்மையை வெளிப்படுத்துகிறேன்.
உங்கள் அனைவருடனும் ஒருமையில் இணைந்திருக்கிறேன். உங்கள் எல்லா பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்கிறேன். சில சமயங்களில் நான் துரிய மாநிலம்-சவிகல்ப சமாதியில் இருக்கும்போது, பூமியில் கைலாசத்தை இயக்கத் தேவையான அனைத்து அறிவும் சக்திகளும் என்னுள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வெளிப்படத் தொடங்குகின்றன.
தினமும் நித்ய சிவ பூஜைக்கு மட்டும், நான் விழித்திருக்கும் மாநிலமான ஜாக்ரத்துக்கு வருகிறேன். அனைத்து 5 மாநிலங்களும் ஒரே நேரத்தில் மற்றும் தன்னிச்சையாகவும், ஒருங்கிணைவாகவும் நிகழும்போது மட்டுமே, அது சஹாஜ சமாதி என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் ஆழ்ந்து உறங்கும் மாநிலம் மற்றும் கனவு நிலை இன்னும் தொடங்கவில்லை, இன்னும் நான் நிர்விகல்ப சமாதி, சவிகல்ப சமாதி மற்றும் ஜாக்ரத் மாநிலங்களை மட்டுமே அனுபவித்து வருகிறேன். நல்ல செய்தி என்னவென்றால், என்னால் இப்போது சரளமாகப் பேச முடிகிறது,
சமாதி இன்னும் நடக்கவில்லை
ஆனால், சஹாஜா சமாதி இன்னும் நடக்கவில்லை. அதனால் நான் வெளிப்படுத்தும் உயரடுக்கு உண்மைகள் சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கலாம்.
ஆனால் பெரிய செய்தி என்னவென்றால், நான் வெளிப்படுத்தும் அனைத்து உண்மைகளும் அறிவும் என்னைச் சுற்றி வாழும் குழுவால் நன்கு ஆவணப்படுத்தப்படுகின்றன. ஒருமுறை சகஜ சமாதி நடந்தால், வழக்கமான சத்சங்கங்கள், வகுப்புகள் மற்றும் துவக்கங்களைத் தொடங்குவேன். என்னுடன் பொறுமையாக இருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றிஎன, அந்த பதிவில் நித்யானந்தா கூறியுள்ளார்.
சமாதி நிலையில் மரணமடைந்தாரா நித்யானந்தா ? : சிலை வைத்து நடந்த பூஜையால் பரபரப்பு