திருமணத்திற்குப் பின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஜோதிகா - Emotional ஆன சூர்யா!

Mammootty Suriya Jyothika Gossip Today
By Sumathi Oct 19, 2022 01:26 PM GMT
Report

நடிகர் மம்மூட்டி- ஜோதிகா இருவரும் புதிய படம் ஒன்றிற்காக இணைந்திருக்கிறார்கள்.

காதல்- தி கோர்

நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு ‘16 வயதினிலே’, ‘பொன்மகள் வந்தாள்’ என தன்னுடையக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணத்திற்குப் பின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஜோதிகா - Emotional ஆன சூர்யா! | Jyotika Mammoottys Together For A New Movie

இந்நிலையில், ஜோதிகாவின் 44வது பிறந்தநாளையொட்டி ஜோதிகா, மம்மூட்டி இணையும் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மம்மூட்டி- ஜோதிகா இருவரும் இணைந்திருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து ‘காதல்- தி கோர்’ எனப் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மம்மூட்டியுடன்..

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநரான ஜோ பேபியுடன் இணைகிறார். இந்தப் போஸ்டரைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்வீட் செய்துள்ள நடிகர் சூர்யா, இந்தக் கதையைக் கேட்ட முதல் நாளில் இருந்தே பிடித்திருப்பதாகவும்

திருமணத்திற்குப் பின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஜோதிகா - Emotional ஆன சூர்யா! | Jyotika Mammoottys Together For A New Movie

படத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் கூறி தன் மனைவி ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார். நடிகர் மம்மூட்டியும் இந்தப் போஸ்டரை வெளியிட்டு ஜோதிகாவுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.   

12 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா மலையாள சினிமாவில் நடிக்க உள்ளார்.