படு நெருக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - புது புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா!
ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும், தன்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டார்.
புகைப்படம் வைரல்
தொடர்ந்து, ரங்கராஜ் நீதிமன்றத்தில், ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த ஃபோட்டோக்கள், வீடியோக்களை டெலிட் செய்ய உத்தரவிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
Married me for the title, ghosted me and the baby in the womb for the thrill. Flirting with others like vows were optional…
— Joy Crizildaa (@joy_stylist) September 23, 2025
“You didn’t just ghost me — you disappeared from your own child’s story.”
“No guilt, no shame just silence where a father should’ve been.”
Pic courtersy… pic.twitter.com/dCHh55dcvj
அத்துடன், உங்களது சொந்த குழந்தையின் கதையிலிருந்தே மறைந்துவிட்டீர்கள். குற்ற உணர்வு இல்லை, வெட்கமாக இல்லை. ஒரு தந்தையாக இருக்க வேண்டிய இடத்தில் மௌனம் மட்டுமே இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை எடுத்தது எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.