விவாகரத்து; ஜெயம் ரவி பன்ன அந்த தப்பு..அடுத்து சூர்யா-ஜோதிகாதான்? எச்சரிக்கும் பிரபலம்!

Jayam Ravi Suriya Jyothika Divorce Aarti Ravi
By Swetha Sep 12, 2024 08:30 AM GMT
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளர் சேகுவாரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளர்.

விவாகரத்து 

திரையுலகில் பல பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து பெற்று வருகின்றது அவர்களது சிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, ஜெயம் ரவி செய்த பெரிய தப்பு,

விவாகரத்து; ஜெயம் ரவி பன்ன அந்த தப்பு..அடுத்து சூர்யா-ஜோதிகாதான்? எச்சரிக்கும் பிரபலம்! | Journalist Che Guevara Talks About Celebs Divorce

வேலையையும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றாக வைத்தது தான். திருமணத்திற்கு பின் ஜெயம் ரவியின் மாமியார் தான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார். கால்ஷீட் கொடுப்பது, கதை கேட்பது கதையை தீர்மானம் செய்வது எல்லாமே மாமியார் தான்,

ஜெயம் ரவி பிரிவதாக அறிவித்தும் கூட, ஆர்த்தி இன்னமும் ஆர்த்தி ரவி என்று போட்டுக்கொள்கிறார். இதற்கு என்ன அர்த்தம், இன்னும் ஜெயம் ரவியின் விவாகரத்து பூர்த்தி ஆகவில்லை என்று அர்த்தம். ஜெயம் ரவிக்கும் இதில் உடன்பாடு இல்லை. இந்த இடத்தில் விவாகரத்து என்பது நிர்பந்தமாக்கப்படுகிறது.

ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூட, என் நெருக்கமானவர்களின் தனி உரிமைக்காக நான் இந்த முடிவை எடுத்தேன் என்று தான் சொல்லி இருக்கிறார். அந்த நெருக்கமானவர் யார் ஆர்த்தி, அவருக்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதை பற்றி பேசினாலே அழுதுருவேன்; ரவிதான் வீட்டில் முதல் ஆம்பள.. ஆர்த்தி அம்மா தகவல்

அதை பற்றி பேசினாலே அழுதுருவேன்; ரவிதான் வீட்டில் முதல் ஆம்பள.. ஆர்த்தி அம்மா தகவல்

அந்த தப்பு..

ஜெயம் ரவிக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு என்றோ, ஆர்த்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றோ எந்தவிதமான நெகட்டிவ் விமர்சனமும் வந்தது இல்லை. இதில் பிரச்சனையே மாமியார் தான், திருமணம் ஆகிவிட்டால், அப்பா, அம்மா ஒரு ஸ்டெப் பின்னாடி நிற்க வேண்டும்.

விவாகரத்து; ஜெயம் ரவி பன்ன அந்த தப்பு..அடுத்து சூர்யா-ஜோதிகாதான்? எச்சரிக்கும் பிரபலம்! | Journalist Che Guevara Talks About Celebs Divorce

நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் கணவன் மனைவிக்கு இடையில் வந்து, வாழ்க்கையை கெடுக்கக்கூடாது. இதே சிக்கல் ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் இருக்கு இதை நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். வேலையையும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்தால் மட்டும் தான் தப்பிக்க முடியும்.

இன்று ஜெயம் ரவி, ஆர்த்தி நாளை சூர்யா, ஜோதிகாவாக இருக்கலாம்.கணவன் மனைவி பிரிந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆர்த்தி, ஜெயம் ரவி 15 வருடம் சேர்ந்து வாழ்ந்துவிட்டார்கள் இனிமேல் விவாகரத்து செய்து என்ன செய்யப்போகிறார்கள் என்று பேசியுள்ளார்.