குழந்தை பெற விரும்பாத சமூகத்தினர் - online dating scheme ஏற்படுத்திய அரசு!

Pregnancy Marriage
By Sumathi Jul 18, 2022 11:17 AM GMT
Report

பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டாத நிலையில், அரசு ஜியோ பார்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பார்சி  சமூகத்தினர்

மிக குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்த சிறுபான்மை சமூகத்தின் திருமணமாகும் தகுதி பெற்ற ஆண்களில் 30 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள். இந்நிலையில், சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் "ஜியோ பார்சி" திட்டத்தின் கீழ்,

குழந்தை பெற விரும்பாத சமூகத்தினர் - online dating scheme ஏற்படுத்திய அரசு! | Jiyo Parsi Scheme Encourages Marriages

பார்சி ஆண் மற்றும் பெண்களை திருமணம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் 'ஆன்லைன் டேட்டிங்' மற்றும் கவுன்சிலிங்கிற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் திட்டத்தை நடத்தும்

ஜியோ பார்சி

பார்சோர் அறக்கட்டளையின் இயக்குனர் ஷெர்னாஸ் காமா இது குறித்து கூறுகையில், பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பது அவசியம் என்று கூறினார்.

குழந்தை பெற விரும்பாத சமூகத்தினர் - online dating scheme ஏற்படுத்திய அரசு! | Jiyo Parsi Scheme Encourages Marriages

ஏனெனில் இந்த சமூகத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு ஜோடிக்கு 0.8 ஆக உள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 200 முதல் 300 பிறப்புகள் ஏற்படுகின்றன. இது மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவான அளவாகும்.

ஆன்லைன் டேட்டிங்

மேலும், ஆண்டிற்கு சுமார் 800 பேர் இறக்கின்றனர். பார்சி சமூகத்தில் குழந்தைகள் குறைவாகப் பிறப்பதற்கு முக்கிய காரணம் திருமண வயது வந்தும் திருமணம் ஆகாதவர்கள் என்று அவர் கூறுகிறார்.

அவர் இது குறித்து கூறுகையில், “பார்சி சமூகத்தைச் சேர்ந்த திருமணத்திற்கு தகுதியானவர்களில் 30 சதவீத திருமணமாகாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது ” என்றார். திருமண நோக்கத்திற்காக ஆன்லைன் டேட்டிங் ஏற்பாடு செய்யும் முறைகள் குறித்து,

மேட்ரிமோனியல் மீட்

சமூக நிகழ்வுகளில் திருமணமான ஆண் மற்றும் பெண்களின் விருப்பு வெறுப்புகள், வருங்கால வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேறு சில தனிப்பட்ட தகவல்கள் குறித்து எங்கள் ஆலோசகர்கள் விவாதிப்பார்கள்.

இதற்குப் பிறகு, இவர்கள் ஆன்லைன் வழியில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் திருமணத்தை தங்கள் விருப்பப்படியே முடிவு செய்கிறார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான தளத்தை மட்டுமே நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்.

ஜியோ பார்சி திட்டத்தின் கீழ், ஆன்லைன் டேட்டிங் மட்டுமின்றி, திருமணத்திற்கான ஆலோசனை சேவையும் வழங்கப்படுகிறது மற்றும் நேருக்கு நேர் சந்திப்புகள் அதாவது 'மேட்ரிமோனியல் மீட்' ஏற்பாடு செய்யப்படுகிறது என கூறினார்.