விதவைகள் மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் - அரசு அறிவிப்பு!
மறுமணம் செய்துகொள்ளும் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமணம்
ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
இதில் அங்கு மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கவுள்ளதாக அரசு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
உதவித்தொகை
இதுகுறித்து பேசியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது.
விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.