நான் படையப்பா - அவுங்க தான் நீலாம்பரி - பிரச்சாரத்தில் ஜெயவர்தன் பளிச்

ADMK DMK Chennai Lok Sabha Election 2024
By Karthick Apr 07, 2024 06:13 PM GMT
Report

தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து களம்காணுகிறார் அதிமுகவின் ஜெயவர்தன்.

தென் சென்னை

சென்னையில் மிகவும் பெற்ற தொகுதியாகியுள்ளது தென் சென்னை. திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

jayavardhan-trolls-thamazhachi-thangapandian

இந்த தமிழகத்தில் மிகவும் கவனம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக தென் சென்னை மாறியுள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் - இந்நாள் அமைச்சர்களும் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள். இன்று பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம பேசிய ஜெயவர்தன், செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

jayavardhan-trolls-thamazhachi-thangapandian

திமுகவை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் தெள்ள தெளிவாக இருக்கிறார்கள். மக்களிம் மாற்றத்தை பார்த்த திமுக, பணம் கொடுத்தாவது ஜெயித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

10 ஆண்டு ஆட்சி Trailer தான் - இனிமேல் தான்...! ஹெச்.ராஜா பரபரப்பு கருத்து

10 ஆண்டு ஆட்சி Trailer தான் - இனிமேல் தான்...! ஹெச்.ராஜா பரபரப்பு கருத்து

நீலாம்பரி

ஆனாலும் திமுகவால் ஜெயிக்க முடியாது. அண்மையில் தமிழச்சி தங்கபாண்டியன் வீடியோவை குறிப்பிட்டு பேசிய ஜெயவர்தன் மக்களிடம் வேண்டுகோள் வைக்கும் போதே, அவரது உடல்மொழியை கவனியுங்கள் என சுட்டிக்காட்டி, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறி, மக்கள் முன்பு கால் மேல் கால் போடுவீர்களா? என்று வினவினார்.

jayavardhan-trolls-thamazhachi-thangapandian

இது ஆணவத்தின் உச்சம் என சாடி, வாக்காளர்களை எந்த அளவுக்கு துட்சமாக நினைத்தால், அவர் இப்படி செய்திருப்பார் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் என கூறினார். ஒரு நீலாம்பரியை போல தான் தமிழச்சி தங்கபாண்டியனின் மனநிலை இருக்கிறது என சாடி, தென் சென்னை மக்களுக்கு என்னை போன்ற படையப்பா தான் தேவை என்றும் நீலாம்பரி தேவை கிடையாது என தெரிவித்தார்.